Friday, 16 January 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா???????


படம்: ஊரு விட்டு ஊரு வந்து
பாடல்: சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா
இசை: இளையராஜா(பாடியவரும் இந்த மாமேதையே.........)
பாடியவர்: ஜானகி அம்மா
வருடம்:1990


இந்தப் பாடலுக்கான சுட்டி இங்கே: சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா
====================================================
ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?

(சொர்கமே..)

ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையேஓடி வந்து குதிச்சு
முங்கி முங்கி குளிக்க அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு

(சொர்கமே..)

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை

(சொர்கமே என்றாலும்..)
======================================================

2 comments:

Anonymous said...

You actually explained this well!

My web site; MCM 財布

Anonymous said...

彼らは軽量でなけれ
ばなりませんよ
うに彼らはアイマスク
で強調されてはな
らない

Also visit my blog ... miumiu アウトレット